சிறைச்சாலைகள் :கவனத்தில் அனுர அரசு!



சிறைச்சாலைகளுள் குழப்பங்களை உருவாக்கி ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிர்தரப்புக்கள் சதி திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.நீர்கொழும்பு சிறை உட்பட மூன்று சிறைகளுள் குழப்பங்களை தோற்றுவிக்க சதிகள் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இந்நிலையில் சிறைச்சாலை கட்டமைப்பில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்குத் தீர்வு காண்பதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல், அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கலந்துரையாடலில், சிறைச்சாலை பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து அவர்கள் முன்வைத்த பரிந்துரைகள் மற்றும் கருத்துகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலை வசதிகளை விரிவுபடுத்துதல் மற்றும் அதற்காக மேற்கொள்ளக்கூடிய மாற்று நடவடிக்கைகள் குறித்தும் அங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் , பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் , நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் , சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமார ஆகியோர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


No comments