மைதி ஒப்பந்தம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்துள்ளது


அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக வந்துள்ளது.

அமெரிக்காவுடனான அமைதி ஒப்பந்தம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நெருக்கமாக உள்ளது என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் அராக்சி பதிவிட்ட இந்தக் கருத்தைத் தொடர்ந்து, வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான ஒப்பந்தம் "நெருங்கிவிட்டது" என்று "மூன்று பிராந்திய அதிகாரிகள்" அசோசியேட்டட் பிரஸ் (AP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தனர்.

ஈரானிலிருந்து அணுப் பொருட்களை அகற்றி அழிப்பதற்கான நிபந்தனைகள் அந்த தற்காலிக ஒப்பந்தத்தில் அடங்கியுள்ளன என ஒரு மூத்த அமெரிக்க அதிகாரி ஏபி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் ஆற்றிய முக்கிய மத்தியஸ்தப் பங்கைப் பிரதிபலிக்கும் வகையில், அராக்சி இந்த சாத்தியமான ஒப்பந்தத்தை 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்று குறிப்பிட்டார் .

"அது இறுதி செய்யப்படும் வரை, அதன் உள்ளடக்கம் குறித்து ஊடகங்கள் யூகங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். எங்களின் பொறுப்பான மற்றும் வெளிப்படையான அணுகுமுறைக்கு இணங்க, அனைத்து விவரங்களும் உரிய நேரத்தில் பொதுமக்களுடன் பகிரப்படும் என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் , வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம் முன்னெப்போதையும் விட நெருங்கிவிட்டது என்ற வாஷிங்டன் மற்றும் தெஹ்ரானின் நம்பிக்கையை எதிரொலித்தார்.

அமைதி ஒப்பந்தத்தின் இறுதி, ஒப்புக்கொள்ளப்பட்ட உரை எட்டப்பட்டிருப்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம் என்று அவர் சமூக ஊடகங்களில் எழுதியதோடு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக இஸ்லாமாபாத் இப்போது இரு தரப்புடனும் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

No comments