இஸ்ரேலின் தாக்குதலில் அதிகாரி உட்பட பல லெபனான் இராணுவத்தினர் பலி!
வாகனத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட பல லெபனான் வீரர்கள் கொல்லப்பட்டதாக லெபனான் இராணுவம் தெரிவித்துள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள கர்தாலி-நபாத்தியே சாலையில் இந்தத் தாக்குதல் நடைபெற்றதாக இன்ற சனிக்கிழமை அதிகாலையில் இராணுவம் தெரிவித்தது. கூறப்படும் இந்தத் தாக்குதல் எப்போது நடந்தது என்பதை அந்த அறிக்கை துல்லியமாகக் குறிப்பிடவில்லை.
கர்தாலி மற்றும் நபாத்தியே ஆகிய இரண்டும் நடைமுறை எல்லைக்கு அருகிலும், கடந்த வார இறுதியில் இஸ்ரேலியப் படைகளால் ஹிஸ்புல்லா படைகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட பியூஃபோர்ட் கோட்டைக்கு அருகிலும் அமைந்துள்ளன.
லெபனான் இராணுவம், ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல்களில் வழக்கமாகத் தலையிடுவதைத் தவிர்த்து வந்துள்ளதுடன், தற்போதைய மோதலிலும் இஸ்ரேலுடன் மோதவில்லை.

Post a Comment