தெற்கு பிரான்சில் கடும் வெப்பம்: காரில் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்பு!

பிரான்சில் கார்பென்ட்ராஸ் எனும் தெற்கு நகரில், 2 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் காரில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். கடும் வெப்ப அலையின் காரணமாகவே இந்த மரணங்கள் நிகழ்ந்திருக்கலாம் என புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர். 

மரணம் ஏற்பட்டதற்கான காரணங்கள் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால் கடும் வெப்ப அலையே விசாரணையின் முக்கியக் காரணமாக உள்ளது என்று கார்பென்ட்ராஸ் தரப்பு வழக்கறிஞர் ஹெலன் மோர்ஜஸ் கூறினார். 

தங்கள் வீட்டிற்கு வெளியே குடும்பக் காரில் குழந்தைகள் சுயநினைவின்றி இருந்ததை அவர்களது தாய் கண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

கார்பென்ட்ராஸில் திங்கட்கிழமை வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் (101 டிகிரி ஃபாரன்ஹீட்) வரை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. 

குழந்தைகளைக் கவனிக்கப்படாத வாகனங்களில் விட்டுச் செல்ல வேண்டாம் என பிரெஞ்சு அதிகாரிகள் பெற்றோரை எச்சரித்துள்ளனர்.    

பிரான்சின் பெரும்பாலான பகுதிகள் வெப்பம் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன, மேலும் சில பிராந்தியங்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. 

மேற்கு மற்றும் மத்திய பிரான்சில் உள்ள பல நகரங்கள், ஞாயிறு முதல் திங்கள் வரை தங்களின் வரலாற்றிலேயே மிக வெப்பமான இரவை அனுபவித்ததாக மெட்டியோ பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

பாரிஸ், ஜூன் மாதத்தின் வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான இரவைச் சந்தித்தது; வெப்பநிலை 24.2 C (75.5 F) க்கும் கீழே குறையவில்லை.

பிரெஞ்சு தலைநகரம் திங்கள்கிழமை பிற்பகல் 37.7°C (99.9°F) வெப்பநிலையுடன் மற்றொரு ஜூன் மாத சாதனையை முறியடித்தது.

No comments