அதானி வெளியே: புதிய இந்திய நிறுவனம் உள்ளே!
இந்தியாவின் முன்னணி முதலீட்டு நிறுவனமான அதானி குழுமத்தினை வடக்கிலிருந்து தேசிய மக்கள் சக்தி வெளியேற்றியிருந்த நிலையில் மற்றொரு முன்னணி இந்திய நிறுவனம் காலுன்றியுள்ளது.
இன்று நடைபெற்ற அனுர அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில் முள்ளிகுளம் காற்றாலை மின் பரிமாற்றத் திட்டத்தைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிததுள்ளார்.
மின் உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான கட்டுமானப் பணிகளுக்கான ஒப்பந்தம் தற்போது வழங்கப்பட்டுள்ளது.முள்ளிகுளம் மின்கட்டமைப்பு துணை மின்நிலையம் மற்றும் அந்த துணை மின்நிலையத்தில் கட்டுமானப் பணிகளுக்காக, சர்வதேச போட்டி கொள்முதல் நடைமுறையின்படி கேள்விகள் கோரப்பட்டன.
ஏலங்களின் மதிப்பீட்டைத் தொடர்ந்து, உயர் மட்ட கொள்முதல் குழு சமர்ப்பித்த பரிந்துரையின் அடிப்படையில், குறைந்தபட்ச ஏலதாரரான இந்தியாவின் நிறுவனத்திற்கு, ஒப்பந்தத்தை வழங்குவதற்காக எரிசக்தி அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக பூநகரி கௌதாரிமுனை மற்றும் மன்னாரில் அதானி குழுமத்தினால் நிறுவப்படவிருந்த காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் அநுர அரசினால் இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment