ஹன்டா வைரஸில் வெளியேற்றப்பட்ட பயணிகள் வீடு திரும்பத் தொடங்கினர்


ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் இருந்து மீட்கப்பட்ட பலர் தங்களது நாடுகளுக்குத் திருப்பி வருகின்றனர். அவர்கள் சுகாதார அதிகாரிகளால் பரிசோதிக்கப்படுவார்கள்.

வெளியேற்றப்பட்ட நான்கு யேர்மானியர்கள் ஃபிராங்பர்ட்டுக்கு வந்தடைந்தனர்.

வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான எம்வி ஹோண்டியஸ் கப்பல், ஸ்பெயினின் டெனெரிஃப் தீவில் உள்ள கிரனாடில்லா துறைமுகத்திற்கு வெளியே நங்கூரமிட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றுவதற்காக விமானங்களை அனுப்பின.

இதுவரை 19 நாடுகளைச் சேர்ந்த 94 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சர் மோனிகா கார்சியா தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானோர் கப்பல் பணியாளர்கள் உள்ளிட்ட மற்ற 34 பேர், கப்பலிலேயே தங்கி, திங்கட்கிழமை அன்று ஹோண்டியஸ் கப்பலில் நெதர்லாந்துக்குச் செல்வார்கள் என்று கார்சியா கூறுகிறார்.

டெனரிஃபிலிருந்து பிரான்சுக்குச் சென்ற ஒரு விமானப் பயணத்தின்போது ஒரு பிரெஞ்சு நாட்டவருக்கு அறிகுறிகள் தென்படும் வரை, மீதமிருந்த பயணிகள் அல்லது விமானப் பணியாளர்கள் யாருக்கும் அறிகுறிகள் தென்படவில்லை.

அமெரிக்கப் பயணி ஒருவருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது, ஆனால் அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. 

ஹன்டா வைரஸ் பரவலால் ஏற்படும் ஆபத்து 'குறைவாகவே உள்ளது' என உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.


No comments