யேர்மனியில் உள்ள படை வீரர்களைக் குறைக்கும் - அமெரிக்கா


யேர்மனியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சுமார் 5,000 அமெரிக்க வீரர்களைத் திரும்பப் பெறுமாறு அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்க்ஸெத் உத்தரவிட்டுள்ளதாக பென்டகன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

யேர்மனியில் உள்ள அமெரிக்கப் படையினரின் எண்ணிக்கையை 14% குறைக்கும் இந்தப் படைக் குறைப்பு நடவடிக்கை, அடுத்த ஆறு முதல் பன்னிரண்டு மாதங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

ஐரோப்பாவில் உள்ள துறையின் படை நிலைப்பாடு குறித்த முழுமையான ஆய்வைத் தொடர்ந்தும், களத்தின் தேவைகளையும் கள நிலவரங்களையும் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுஎன்று அவர் மேலும் கூறினார். ஐரோப்பாவில் உள்ள துறையின் படை நிலைப்பாடு குறித்த முழுமையான ஆய்வைத் தொடர்ந்தும், களத்தின் தேவைகளையும் கள நிலவரங்களையும் கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்

No comments