ஓமான் வளைகுடாவில் ஓசன் கோய் என்ற கப்பலைத் தூக்கியது ஈரான்


ஓமான் வளைகுடாவில் நடத்திய சிறப்பு நடவடிக்கை ஒன்றில், ஓஷன் கோய் என்ற எண்ணெய் கப்பலைக் கைப்பற்றியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது. மேலும், அந்தக் கப்பல் எண்ணெய் ஏற்றுமதியையும் ஈரானிய தேசத்தின் நலன்களையும் சீர்குலைக்க முயன்றதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையில், ஈரானிய கடற்படையின் ரேஞ்சர்கள் மற்றும் மரைன்கள், குற்றமிழைத்த அந்த எண்ணெய்க் கப்பலை நாட்டின் தெற்குக் கடற்கரைக்கு வழிநடத்தியதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

எங்கள் நாட்டின் கடல் எல்லைக்குள் ஈரானிய தேசத்தின் நலன்களையும் சொத்துக்களையும் வலுவாகப் பாதுகாப்போம், மேலும் எந்தவொரு விதிமீறுபவர்களையும் அல்லது ஆக்கிரமிப்பாளர்களையும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று கூறப்பட்டுள்ளது.

ஈரானியப் படைகள் கப்பலில் ஏறி அதைக் கைப்பற்றும் காணொளியை அரசு தொலைக்காட்சி வெளியிட்டது. மரைன் டிராக்கர் தகவலின்படி, அந்தக் கப்பல் பார்படாஸில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments