சீனாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 82 பேர் உயிரிழப்பு
வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்ததாகவும், இன்னும் சிலர் காணாமல் போனதாகவும் அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல் போனவர்களைத் தேடி மீட்க முழுமையான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என அதிபர் ஷி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார்.
வட சீனாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிப்பில் 82 பேர் உயிரிழந்ததாக , அரசு ஊடகங்கள் சனிக்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளன.
காணாமல் போன ஒன்பது பேரை மீட்பு குழுவினர் இன்று தீவிரமாக தேடி வருவதாக அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளார்.
சீனாவின் ஏழ்மையான மாகாணங்களில் ஒன்றான ஷான்சியின் கின்யுவான் மாவட்டத்தில் உள்ள லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில், வெள்ளிக்கிழமை இரவு 7:29 மணிக்கு (1129 GMT/UTC) இந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்ததாகவும், அப்போது 247 தொழிலாளர்கள் நிலத்தடியில் இருந்ததாகவும் சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை அதிகாலை பெரும்பாலானோர் பாதுகாப்பாக மேற்பரப்பிற்கு கொண்டுவரப்பட்டதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

Post a Comment