குகையில் சிக்கியிருந்த நான்கு பேரும் மீட்பு


லாவோஸில் வெள்ளம் சூழ்ந்த குகையில் சிக்கியிருந்த நான்கு பேரை மீட்புக் குழுவினர் மீட்டதாக தாய்லாந்து மீட்புக் குழுவினர் சனிக்கிழமை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு வெள்ளம் சூழ்ந்த குகையிலிருந்து மற்றொருவர் மீட்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர் இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஐந்து பேரும், சைசோம்பூன் மாகாணத்தில் உள்ள குகையில் தங்கம் தேடுவதற்காக நுழைந்த ஏழு லாவோ நாட்டவர்களில் அடங்குவர்; ஆனால், அவர்கள் வெளியேறும் வழி தடுக்கப்பட்டதால், ஒரு வாரத்திற்கும் மேலாக அவர்கள் உள்ளே சிக்கிக்கொண்டனர். 

No comments