ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்றாவது கப்பல் மீது ஈரான் தாக்குதல்


ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்றாவது கப்பல் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியதாக ஈரானிய செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

யூஃபோரியா என அடையாளம் காணப்பட்ட கப்பல் மீதான தாக்குதல் குறித்து நூர் நியூஸ், ஃபார்ஸ் மற்றும் மெஹர் ஆகிய ஊடகங்கள் அனைத்தும் செய்தி வெளியிட்டன.

அந்தக் கப்பல் ஈரானியக் கடற்கரையில் தரைதட்டிவிட்டதாக அறிக்கைகள் தெரிவித்தன. 

முன்னதாக, பாதுகாப்புப் படையினர் மேலும் இரண்டு கப்பல்களைக் கைப்பற்றி அவற்றை ஈரானுக்குக் கொண்டு செல்வதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது.

அது, எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா மற்றும் எபமினோண்டாஸ் ஆகிய அந்தக் கப்பல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அனுமதியின்றி நீரிணையைக் கடக்க முயன்றதன் மூலம் அவை கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் குற்றம் சாட்டியது.

No comments