ஈரான் வான்பரப்பில் இரண்டு அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!! விமானியைத் தொடர்ந்து தேடும் அமெரிக்கா


நேற்று வெள்ளிக்கிழமை இரண்டு அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, காணாமல் போன இரண்டு விமானப் பணியாளர்களில் ஒருவரை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவிற்குச் சொந்தமான F-15E ரக போர் விமானம் ஒன்று ஈரான் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது.

F-15E விமானத்தில் இரண்டு விமானிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் மீட்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்காவிற்குச் சொந்தமான ஏ-10 வார்ஹாக் விமானம் ஒன்றும் பாரசீக வளைகுடாப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஏ-10 விமானத்தின் தனி விமானியும் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

F-15E விமானத்தின் இரண்டாவது பணியாளரைக் கண்டுபிடிப்பதற்காக அமெரிக்கத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

காணாமல் போன அமெரிக்க அதிகாரியைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ஈரான் அதிகாரிகள் சன்மானம் அறிவித்துள்ளனர்.


No comments