இந்தோனேசியாவில் பொிய நிலநடுக்கம்!
வடக்கு இந்தோனேசியாவை 7.4 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம் உலுக்கியதில், குறைந்தது ஒருவர் உயிரிழந்தார். ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்தோனேசியாவின் டெர்னேட் கடற்கரைக்கு அப்பால் உள்ள வடக்கு மொலுக்கா கடலில், இன்று வியாழக்கிழமை அதிகாலையில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
வடக்கு சுலவேசியில் உள்ள பிதுங் மற்றும் மனாடோ நகரங்களிலும், அதற்கடுத்த மாகாணமான வடக்கு மலுக்குவில் உள்ள டெர்னேட் நகரத்திலும் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கியது மற்றும் சேதப்படுத்தியது.
மனடோ நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்ததாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் இந்தோனேசியாவின் தேடல் மற்றும் மீட்பு முகமை தெரிவித்துள்ளது. டெர்னேட்டில் குறைந்தது மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தேடுதல் மற்றும் மீட்பு அதிகாரியான ஜார்ஜ் லியோ மெர்சி ரண்டாங், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம், அந்தப் பெண் "இடிபாடுகளுக்கு அடியில் புதைந்துள்ளார் என்று தெரிவித்தார்.

Post a Comment