வவுனியாவில் முச்சக்கர வண்டி - புகையிரத விபத்து ; பெண் உயிரிழப்பு - ஆணொருவர் படுகாயம்
வவுனியாவில் புகையிரதத்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் , ஆணொருவர் படுகாயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன், திருநாவற்குளம் பகுதியில் உள்ள புகையிரத கடவையை கடக்க முயன்ற முச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த புகையிரத கடவையானது பாதுகாப்பற்ற முறையில் இருந்ததே இந்த விபத்துக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தின் போது முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அத்துடன், முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்ற நபர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில், சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment