சிவஞானம் சிறீதரன் -சார்ள்ஸ் நிர்மலநாதன் சந்திப்பு!



மன்னார் மாவட்டத்திற்கு விஜயம் செய்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர், இன்றைய தினம் மன்னார் மறைமாவட்ட ஆயர் அதிவணக்கத்துக்குரிய பேரருட்கலாநிதி ஞானப்பிரகாசம் அந்தோனிப்பிள்ளை ஆண்டகையைச் சந்தித்துச் சமகால அரசியல் நிலவரங்கள் குறித்துக் கலந்துரையாடினர்.

​மன்னார் ஆயர் இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகள் குறித்தும், தற்போதைய அரசியல் சூழல்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டதாக  சிறீதரன் தரப்பு அறிவித்துள்ளது

No comments