விகாரை பாதையில் கோயிலிலிற்கும் சலாம்!
யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொன்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி தன்னிடம் நேரில் வரவில்லை என அண்மையில் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதி அதிருப்தி தெரிவித்திருந்த நிலையில் , ஜனாதிபதி விகாரதிபதியை இன்று வெள்ளிக்கிழமை (16) சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன முதல் மகிந்த ராஜபக்ச,கோத்தபாய ராஜபக்ச என முன்னாள் ஜனாதிபதிகள் நயினாதீவுக்கு சென்று , நாக விகாரை விகாரதிபதியை சந்தித்து ஆசிகளை பெற்றுக்கொள்வது வழமையாகவே இருந்து வந்துள்ளது.
இதனிடையே நயினாதீவு நாகவிகாரைக்கு பயணித்த அனுரகுமார திசாநாயக்க, வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.
நயினாதீவுக்கு இன்று வெள்ளிக்கிழமை உலங்கு வானூர்தியில் , நாக விகாரைக்கு சென்றிருந்த அனுர அதன்பின்னர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு சென்று ஜனாதிபதி சென்று வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்;.

Post a Comment