09ஆம் திகதி வரையில் டக்ளஸ் தேவானந்தாவிற்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை எதிர்வரும் ஜனவரி மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கம்பஹா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2001ஆம் ஆண்டு அவரது தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தினால் வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று, 2019ஆம் ஆண்டு திட்டமிட்ட குற்றவாளியான மாகந்துர மதூஷிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கண்டெடுக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்காக கடந்த 26ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து டக்ளஸ் தேவானந்தவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து தெளிவுபடுத்தத் தவறியமையினாலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
அதனை அடுத்து அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு , 72 மணிநேர தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் மாலை மீண்டும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது, விளக்கமறியலில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
Post a Comment