நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்தொழிலாளர்கள் கைது


நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மூன்று தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடற்படையினர் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு கடலில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த வேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் படகொன்றில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த மூன்று தமிழக கடற்தொழிலாளர்களை கைது செய்தனர்

கைது செய்யப்பட்ட மூவரையும் அவர்களின் படகினையும்  மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்து , படகினை அப்பகுதியில் தடுத்து வைத்ததுடன் , மூன்று கடற்தொழிலாளர்களையும் கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர் 

No comments