ஆடம்பரங்களை தவிர்த்து அர்த்தமுள்ள வகையில் கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுங்கள்
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்த, மற்றும் பாதிக்கப்பட்ட மக்களை மனதில் கொண்டவர்களாக வருகின்ற கிறிஸ்து பிறப்பு விழாவை அமைதியுடனும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டாடுமாறு யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் கிறிஸ்தவ மக்களை கேட்டுள்ளார்.
பொருத்தமற்ற ஆடம்பரங்களை தவிர்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் செயற்பாடுகளை முன்னெடுத்து, பாலன் இயேசு கொண்டு வந்த அமைதி விடுதலை ஆகிய நற்செய்திகளை மக்களுக்கு அறிவித்து, துன்புறும் மக்களோடு ஒன்றிணைந்த உள்ளங்களோடு கிறிஸ்து பிறப்பு விழாவை கொண்டாடுமாறு குரு முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்.

Post a Comment