செல்வத்திற்கு விசாரணை?
நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மீது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியைச்சேர்ந்த ராஜ்குமார் ரஜீவ்காந்த் கோரிக்கைவிடுத்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் ரஜீவ்காந்த் இன்றையதினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
செல்வம் அடைக்கலநாதன் தனது கட்சியில் உள்ள ஒரு உறுப்பினர் சுரேஸ் என்பவருடன் தொலைபேசியில் உரையாடுகின்ற ஒரு குரல் பதிவு தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
உரையாடலில் செல்வம் அடைக்கலநாதன் சுரேஸ் என்ற நபருடைய உயிருக்கும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
இதனையடுத்து, சில நாட்களின் பின்னர் சுரேஸ் என்கின்ற நபர் நீர்கொழுப்பு பகுதியிலே உயிரிழந்திருக்கிறார்.அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தாம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் தெரிவித்துள்ளார்.
இதனிடையே செல்வம் அடைக்கலநாதன் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அண்மைய தினங்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் கட்சியின் தலைமைக் குழு கூட்டத்திலும் அவரை பதவி விலகுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment