இலங்கை இராணுவத்திற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி!
இலங்கையின் பாதுகாப்புப் படையினருக்கு இந்தியாவும் அமெரிக்காவும் அளித்து வரும் ஆதரவு குறித்து ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார்.
இந்தியா 70 ஜீப்புகளையும் பல்வேறு தொழில்நுட்ப உதவிகளையும் வழங்கியுள்ளது, மேலும் ஆயுதப்படைகளின் திறன் நிலைகளை மேம்படுத்த ஒரு தொழில்நுட்ப அக்கடமியை நிறுவுவதற்கு ஆதரவளிக்க முன்மொழிந்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் இலங்கைக்கு 10 TH57 உலங்குவானூர்திகளை பரிசாக வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. கூடுதலாக, அமெரிக்காவும் அவுஸ்ரேலியாவும் 2026 மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் இலங்கை விமானப்படைக்கு இரண்டு C-130 விமானங்களை பரிசாக வழங்கும்.
அமெரிக்கா மற்றும் அவுஸ்ரேலியாவால் ஏற்கனவே பீச் கிராஃப்ட் விமானங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment