தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிவந்த சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.
அல்லைப்பிட்டியை சேர்ந்த கண்ணதாஸ் பிரேமதாஸ் எனும் மீன் வியாபாரியே உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து நயினாதீவு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து , யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை வீதியில் , அல்லைப்பிட்டி சந்திக்கு அருகில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மீன் வியாபாரியை மோதியதில் வியாபாரி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
வியாபாரியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள ஊர்காவற்துறை பொலிஸார் விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment