வட கடலில் ஒரேநாளில் 47 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 47 பேர் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார், நெடுந்தீவு ஆகிய கடற்பிராந்தியங்களில் வைத்தே இந்தக் கைது நடவடிக்கைகள் நேற்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டன.
மீனவர்களின் ஐந்து படகுகள், அவற்றில் இருந்த மீன்பிடி உபகரணங்கள் மற்றும் இழுவைமடி மூலம் பிடிக்கப்பட்ட தொன் கணக்கான மீன்கள் என்பனவும் இலங்கைக் கடற்படையால் கைப்பற்றப்பட்டன.
Post a Comment