காணி பிடிப்பது உரிமை?



புலம்பெயர் தமிழ் மக்களது காணிகளை சட்டவிரோதமாக சுவீகரிக்கும் தமிழ் சட்டத்தரணிகள் கைது வேட்டை யாழில் சூடுபிடித்துள்ளது.

இந்நிலையில் கைதினை மடைமாற்ற நீதிமன்ற அனுமதியின்றி காவல்துறையினர் வழக்கறிஞரின் வீட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சோதனை செய்ததாகக் குற்றம் சாட்டி, யாழ்ப்பாணத்தில் வழக்கறிஞர்கள், செவ்வாய்க்கிழமை(07) பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர்.

ஆவர்களிற்கு ஆதரவாக வடக்கின் ஏனைய மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பில் குதித்திருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் காணி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் பல வழக்கறிஞர்கள் மீது காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நில மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு வழக்கறிஞரை  கைது செய்யும் நோக்கத்துடன், காவல்துறை அதிகாரிகள் அவரது வீட்டிற்குள் ஞாயிற்றுக்கிழமை(05), நுழைந்து, வீட்டிற்குள் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், நீதிமன்றத்தின் முன் அனுமதி அல்லது பிடிவிறாந்து பெறாமல் சோதனை நடத்தியதாக காவல்துறையினர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே காவல்துறையினரின் நடவடிக்கைகளைக் கண்டித்து நீதிமன்றங்களுக்கு முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

இதற்கிடையில், நில மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் வழக்கறிஞர்கள், காவல்துறையினரால் கைது செய்யப்படுவதைத் தடுக்க நாளை புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்பிணை  மனுக்களை தாக்கல் செய்யவுள்ளார்கள்.


No comments