கடலால் வருகை தந்தவர்கள் காவல்நிலையத்தில்!





இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் ஆண்,பெண் பிள்ளைகள் உள்ளடங்களாக நான்கு பேர் அவ்வாறு தாயகம் திரும்பியுள்ளனர்.

மன்னாரைச் சேர்ந்த அவர்கள் யுத்தம்   காரணமாக கடல் வழியாக படகில் சென்று தமிழகத்தில் அடைக்கலம் புகுந்து முகாமில் வசித்து வந்துள்ளதாக  கூறப்படுகின்றது.

இந்நிலையில் இயல்பு வாழ்வு திரும்புவதாக தெரிவித்து நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை (14)  இரவு தமிழ் நாட்டில் இருந்து படகில் புறப்பட்டு மன்னார் பேசாலை கடற்பரப்பை வந்தடைந்ததாக தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு  வந்தவர்களை கடற்படையினரோ அல்லது காவல்துறையினரோ ; கண்டு கொள்ளாத போதும் தாமாக அவர்கள்   காவல் நிலையத்திற்கு  சென்று விவரத்தைத் தெரிவித்துள்ளனர்.அதையடுத்து நால்வரையும் கைது செய்து பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

எனினும் முன்னதாக கடல்வழியாக தாயகம் திரும்பியவர்கள் குடும்பம் குடும்பமாக கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments