கட்டுநாயக்கவில் சிறிதரன் கைது


டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட  ஸ்ரீதரன் என்ற 'டிங்கர்' என்பவரை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்றைய தினம் புதன்கிழமை  கைது செய்து பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

கொழும்பு 15 இல் வசித்து வந்த 36 வயதுடைய குறித்த நபர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பழனி ஷிரான் க்ளோரியன் அல்லது "கொச்சிக்கடை ஷிரான்" இன் உதவியாளராக செயற்பட்டு வந்துள்ளனர்

அதேவேளை மஹவத்த பொது மயானத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த முச்சக்கர வண்டியில் ஒருவரை சுட்டுக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சம்பவத்தில், துப்பாக்கி தாரி வந்த காரின் சாரதியாக இவர் செயற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த ஆகஸ்ட் 19ஆம் திகதி பேலியகொட பொலிஸ் பிரிவில் உள்ள ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொன்று, மற்றொரு நபரை கடுமையாகக் காயப்படுத்திய குற்றத்தைச் செய்யத் தேவையான துப்பாக்கிகளை கொண்டு சென்ற குற்றத்திலும் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அவருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், விசாரணையில் ஓகஸ்ட் 19 அன்று வெளிநாட்டுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

அந்நிலையில் அண்மையில் டுபாயில் கைது செய்யப்பட்ட நிலையில் , இன்றைய தினம் அவர் நாடு கடத்தப்பட்ட நிலையில் விமான நிலையத்தில் கைதாகியுள்ளார். 

No comments