தலாவ பகுதியில் விபத்து - நால்வர் உயிரிழப்பு ; மூவர் படுகாயம்


குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை அதிகாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்  வேனில் பயணித்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தலவா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments