போராட்ட ஆயுதங்கள் பாதாள கும்பலிற்கு!



வடகிழக்கு தமிழர் தாயகத்தில் இலங்கை படைகளால் மீட்கப்படும் ஆயுதங்கள் பாதாள உலகக்கும்பல்களிற்கு விற்கப்படுவது அம்பலமாகியுள்ளது.கமாண்டோ சலிந்த என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிக்கு துப்பாக்கிக்கான தோட்டாக்களை  விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் இராணுவ லெப்டினன்ட் கேணல் ஒருவர் இன்று (11) குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்ட நேரத்தில் முல்லைத்தீவில் உள்ள   இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அவர் கணேமுல்ல கமாண்டோ படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்த காலத்தில், கமாண்டோ சாலிந்தாவுக்கு ரி56 துப்பாக்கிக்கு 260 தோட்டாக்களை இரண்டு சந்தர்ப்பங்களில் 650,000 ரூபாய்க்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடுதலாக, அவர் மீது மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் கைது செய்யப்பட்ட இராணுவ அதிகாரி மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே வடக்கு கிழக்கில் தங்க மற்றும் ஆயுத புதையல்களில் தொடர்;ச்சியாக இலங்கையின் முப்படைகளது அதிகாரிகள் தொடர்ச்சியாக கைதாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments