ஹரிணி கதிரைக்கு ஆபத்தில்லையாம்!
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார்.
எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் கூறியிருந்தார்.
"முன்னதாக, ஹரிணி அமரசூரிய தனது அமைச்சர் பதவியை இழப்பார் என்று அவர்கள் கூறினர். இப்போது அவர் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்படுவார் என்று கூறுகின்றனர். இவை அவர்களின் கனவுகளே தவிர வேறு ஒன்றும இல்லை," என்றும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இதனிடையே கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது எவரும் உரிமை கோர முடியாது. இதுவரை இந்திய அரசாங்கம் கச்சதீவு தங்களுக்கு சொந்தமானது என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லையெனவும் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களது கேள்விகளிற்கு பதிலளித்த அவர் எங்களுக்கு சர்வதேச தலையீடு தேவையில்லை. எங்களுடைய நாட்டிற்குக்குள்ளே நாங்கள் பிரச்சனையை தீர்த்து கொள்ளுவோமெனவும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
Post a Comment