இன அழிப்பிற்கு நீதி கோரி போராட்டம்!
தமிழ் இனவழிப்புக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது.
இதனிடையே சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாளான நாளைய தினம் புதன்கிழமை; அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, போராட்டத்திற்கு வலுசேருக்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
யாழ் செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் நாளைய தினம் புதன்கிழமை வரை குறித்த போராட்டம் நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது.
செம்மணி புதைகுழி பகுதியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போரட்டம் சர்வதேக கவனத்தை ஈர்த்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment