யாழில். கடல் அலையில் சிக்கிய படகை மீட்க முயன்ற கடற்தொழிலாளி உயிரிழப்பு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் , வெளிமாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் உடப்பு பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி சசிதரன் (வயது 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.
வெளிமாவட்டத்தை சேர்ந்த கடற்தொழிலாளர்கள் சுண்டிக்குளம் பகுதியில் வாடி அமைத்து கரைவலை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை சீரற்ற கால நிலை காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் படகு ஒன்று அலையில் அடிப்பட்டு சென்ற வேளை , குறித்த தொழிலாளி படகினை மீட்க முற்பட்ட வேளை , கடல் அலையில் சிக்குண்ட படகு , தொழிலாளி மீது வேகமாக மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.
அதனை அடுத்து அங்கிருந்த சக தொழிலாளிகள் அவரது சடலத்தை மீட்டு நித்தியவெட்டை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment