நாளை விடுமுறை?
நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை வியாழக்கிழமை (21.08.2025) விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அறிவித்துள்ளார். பதில் பாடசாலை நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே தமது கோரிக்கையின் பேரிலேயே விடுமுறை வழங்கப்பட்டதாக அனுர அரசின் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சண்டையினை தொடங்கியுள்ளனர்.
Post a Comment