வாகன இறக்குமதி:தொடரும் கைதுகள்!
சுமார் 25கோடி மதிப்புள்ள ( 250 மில்லியன் மதிப்புள்ள ) 21 மோட்டார் சைக்கிள்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு ஹம்பாந்தோட்டையில் உள்ள நகரவெவ பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவை தீவனக் களஞ்சியசாலையில் மறைத்து வைத்திருந்ததற்காக இருவர் கைதாகியுள்ளனர்.
இதனிடையே கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தால் ஜூலை 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் மற்றும் களஞ்சிய உரிமையாளருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மகிந்தவினால் கட்டி திறக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகாம் ஊடாக வாகனங்களை இறக்க அனுமதித்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment