இனவழிப்பிற்கு நீதி கோரி வடகிழக்கில் போராட்டம்!
நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம், கிளிநொச்சி கந்தசாமி கோயில், மன்னார் நகரப்பகுதி வவுனியா புதிய பேருந்து நிலையம் யாழ்ப்பாணம் செம்மணியிலும் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
உண்மைக்கும் நீதிக்குமான போராட்டத்தில் தமிழ்தேசிய பரப்பில் பயணிக்கும் அனைவரும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவிக்கவேண்டும் என வடக்குகிழக்கு சமூக இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனிடையே செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்கின்ற நிலையில் இன்று வெள்ளிக்கிழமை மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ளன.அதனையடுத்து இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த மனித எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செம்மணி பகுதியில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பல தரப்புக்களும் தமது ஆதுரவை தெரிவித்துவருகின்றன.
Post a Comment