டிரம்பின் மிரட்டலுக்கு அடிபணியாத ஈரான்: சியோனிஸ்டுகளுக்கு நாங்கள் கருணை காட்ட மாட்டோம் - காமெனி


டிரம்ப் தன்னைக் கொலை செய்வதாக மிரட்டியதை அடுத்து ஈரானிய உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி தனது எக்ஸ் தளத்தில் அறிக்கையை வெளியிட்டார்.

அப்பதிவில் “உன்னதமான ஹைதரின் பெயரால், போர் தொடங்குகிறது.” நான்காவது முஸ்லிம் கலீஃபாவான அலியின் மாற்றுப் பெயர் ஹைதர் எனக் குறிப்பிட்டார்.

பயங்கரவாத சியோனிச ஆட்சிக்கு நாம் வலுவான பதிலடி கொடுக்க வேண்டும். சியோனிஸ்டுகளுக்கு (இஸ்ரேலுக்கு) நாங்கள் கருணை காட்ட மாட்டோம். 

டிரம்பின் அச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு ஈரான் கடுமையாக பதிலடி கொடுக்கும் என்று ஈரானிய உச்ச தலைவர் எக்ஸ் தளத்தில் ஆங்கிலத்தில் தனது கருத்தை மீண்டும் வலியுறுத்தினார் அயதுல்லா அலி கமேனி.

No comments