ஈரான் மீது அமொிக்கா குண்டு வீச்சு: 3 அணுசக்தி நிலையங்களும் அழிப்பு!
ஃபோர்டோவ், நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய இடங்களில் உள்ள ஈரானிய அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கப் படைகள் "மிகவும் வெற்றிகரமான" தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும், அனைத்து அமெரிக்க விமானங்களும் இப்போது ஈரானிய வான்வெளியில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.
இதுபற்றி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ட்ரூத் சோசியலில் வெளியிட்டு உள்ள செய்தியில், ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நாங்கள் வெற்றியுடன் தாக்குதல் நடத்தி முடித்துள்ளோம்.
ஈரான் நாட்டின் வான்வெளிக்கு வெளியே அனைத்து விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பர்தவின் முக்கிய தலங்கள் மீது முழு அளவில் வெடிகுண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளோம். இதனை தொடர்ந்து விமானங்கள் அனைத்தும் பாதுகாப்பாக நாடு திரும்பி விட்டன.
அமெரிக்காவின் நம்முடைய சிறந்த போர் வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை. இது அமைதிக்கான நேரம் ஆகும். இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியதற்காக நன்றி என தெரிவித்து உள்ளார்.
ஃபோர்டோ அணுசக்தி தளத்தின் ஒரு பகுதி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கோமில் உள்ள ஒரு அதிகாரி கூறியதாக ஈரானிய தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் ஈரானின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. இஸ்ரேலுடன் இணைந்து இந்த இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா பங்கேற்றால், ஈரானியர்கள் இப்பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க துருப்புக்கள் மற்றும் தளங்களைத் தாக்குதலுக்கான சட்டபூர்வமான இலக்குகளாகக் கருதுவார்கள் என்று அது கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் சுமார் 19 அமெரிக்க தளங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 40,000 அமெரிக்க துருப்புக்கள் உள்ளன, மேலும் அமெரிக்கா இந்த மோதலில் இணைந்தால் இந்த துருப்புக்கள் பாதுகாப்பாக இருக்காது என்று ஈரானியர்கள் கூறியுள்ளனர்.
ஈரான் சந்திக்கும் எந்தவொரு தீங்கையும் விட அது சந்திக்கும் சேதம் மிக அதிகமாக இருக்கும்" என்று காமெனி வீடியோவில் கூறுகிறார்.
Post a Comment