யாழில். மேற்கொள்ளவுள்ள மீள்குடியேற்றம் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட யாழ். கட்டளை தளபதி
யாழ் . மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மீள் குடியேற்றங்கள் தொடர்பில் யாழ் . மாவட்ட கட்டளை தளபதி , மாவட்ட செயலருடன் விரிவாக கலந்துரையாடியுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் கே. ஏ. என். ரசீஹ குமார, யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை இன்றைய தினம் வியாழக்கிழமை மரியாதை நிமித்தம் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், மயிலிட்டித் துறைமுக அபிவிருத்தி மற்றும் காணி விடுவிப்பு தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி உடனிருந்தார்கள்.
Post a Comment