ஆஸ்திரியா பள்ளி துப்பாக்கிச் சூட்டில் பலர் பலி!
ஆஸ்திரியா கிராஸ் நகர பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் குற்றவாளி என்று கூறப்படும் நபர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர்.
துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகளுக்குப் பின்னர் பள்ளியிலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டனர் என ஆஸ்திரிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
உள்ளூர் நேரப்படி காலை 10 மணிக்கு காவல்துறையின் இந்த நடவடிக்கை தொடங்கியது.
ஏனையவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் ஆபத்து எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிராஸில் சுமார் 300,000 மக்கள் வசிக்கின்றனர். இது ஸ்டைரியா மாநிலத்தின் தலைநகரமாகும்.

Post a Comment