பீதியில் தெற்கு முன்னாள்கள்?



முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரச அதிகாரிகள் உட்பட  சமீபத்திய நாட்களில் பல கோயில்கள், விகாரைகளுக்கு சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக  கொழும்பு ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத  குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்களாவர். 

சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காமம் கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரச அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெயஸ்ரீமஹா போதி தேரரை சந்தித்துள்ளதுடன்   ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.

பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரச அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments