மினி சூறாவளி:நிகழ்வு பிற்போடப்பட்டது!
யாழ் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மினி சூறாவளி இன்று ஞாயிற்றுக்கிழமை அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனால் பனைகள் முறிந்து வீழ்ந்தன .அத்துடன் மின் வடங்கள் அறுந்து வீழ்ந்தன. அத்துடன் மின்துண்டிப்பும் நடந்துள்ளது.
இதனிடையே யாழ்ப்பாண கலாச்சார மண்டப வளாகத்தில் இன்றைய தினம் நடைபெறவிருந்த இசை நிகழ்வும் யாழில் பெய்த திடீர் மழையால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.இந்திய தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியான சீ தொலைக்காட்சியின் சரிகமபதநி கலைஞர்களது நிகழ்வே தடைப்பட்டுள்ளது.
ஏதிர்பாராத விதமாக மினி சூறாவளி வீசியதுடன் கதிரைகள் மற்றும் மேடைகள் சேதமடைந்துள்ளன.இதனையடுத்து நிகழ்வு இடைநிறுத்தப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
Post a Comment