உயிரிழந்தவர்களுக்கு நீதியும் , வாழ்வோருக்கு உண்மையும் தேவை
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட குறித்த போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் , பொது அமைப்புக்களை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு நீதி கோரி கோஷங்களை எழுப்பினர்.
அதேவேளை வடக்கில் மனித புதைகுழிகள் என வதந்திகள் பரப்பப்படுவதாக நீதி அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்துக்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
Post a Comment