திருமலை முதல்வர் தயாராம்!



இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸிற்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த பிரகாரம் திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு இலங்கை தமிழரசுக் கட்சி தனது தரப்பின் பெயரை அறிவித்துள்ளது.

திருகோணமலையின் புதிய மாநகர சபை உறுப்பினரான கந்தசாமி செல்வராஜாவின் பெயரை தமிழரசுக்கட்சி முதல்வர் பதவிக்கு முன்மொழிய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் ஊடகங்களுக்கு இன்று  தெரிவித்துள்ளார். 

திருகோணமலை மாநகரசபைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட 9 உறுப்பினர்கள் எனது தலைமையில் கூடி, ஜனநாயக முறைப்படி முதல்வர் தெரிவிற்கான தீர்மானத்தை மேற்கொண்டனர். அதே போன்று மாவட்டத்தில் கட்சி அதிக ஆசனங்களை வெற்றி பெற்ற சபைகளுக்கான தலைவர் மற்றும் உப தலைவர் தெரிவுகளுக்கும் ஜனநாயக முறைப்படி நடைபெறும் ”எனவும் சண்முகம் குகதாசன் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம்களிடம் கிழக்கினை தாரைவார்த்துவிட்டதான குற்றச்சாட்டுக்களை தமிழரசுக்கட்சி மீது முன்வைத்துவந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தற்போது முஸ்லீம் தலைவர்களை பாராட்ட தொடங்கியுள்ளது. 

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை மீளப்; பெற வைப்பதற்காக தமிழ் தரப்புடன் இணைந்து காத்திரமான பங்களிப்பை செய்த சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் ஆகியோருக்கு  நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.


No comments