அனுர அரசு சரிவராது:வடக்கு ஆளுநர்!



ஜனாதிபதி அனுர திசநாயக்க நல்லவர்.அவர் கேட்டுக்கொண்டதாலேயே ஆளுநர் பதவியை பொறுப்பேற்றதாக தெரிவித்து வந்த வடக்கு ஆளுநர் அரசிற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க தொடங்கியுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தைப்பொறுத்தவரையில் வெளிப்படுத்தல் உறுதி மூலமாக காணி மோசடிச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக ஆளுநர் குற்றஞ்சுமத்தியுள்ளார்.எனினும் அத்தகைய நடவடிக்கை தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்த காவல்துறை அதிகாரிகள் அரசினால் இடமாற்றப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆட்சியிலிருப்பது ஊழலை ஒழிக்கவந்ததாக கூறிக்கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஆளுநர் இருந்துவருகின்றார்.எனினும் ஆளுநரையும் மீறிய சக்தி ஒன்று அரசாங்கத்திற்குள் இருந்து வடக்கு மாகாணத்தை ஆட்டுவிக்கின்றதா? ஏன்ற கேள்விகள் முன்வைக்கபட்டுள்ளன.

கட்சியின் ஆதரவாளர்கள் பெயரில் மோசடிகளில் ஈடுபடும் கும்பலினை பாதுகாக்கும் அமைச்சர் பற்றியே தற்போது தேசிய மக்கள் சக்தியில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றது.


No comments