யாழில். மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதி உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் மூளைக்காய்ச்சல் காரணமாக யுவதியொருவர் உயிரிழந்துள்ளார். 

வலி. வடக்கு வீமன்காமம் பகுதியை சேர்ந்த கவிந்தன் சாமினி (வயது 22)  எனும் யுவதியே உயிரிழந்துள்ளார். 

கடந்த 14ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

மூளைக்காய்ச்சல் காரணமாகவே இறப்பு ஏற்பட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டுள்ளனர். 

No comments