ஜம்மு – காஷ்மீரில் உயிரிழந்தவர்களுக்கு யாழில். அஞ்சலி
இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் பஹல்கம் பகுதியில், கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பொதுமக்களுக்கான அஞ்சலி நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம்கலாசார மண்டபத்தில் இந்தியத் துணைத்தூதரகத்தால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த அஞ்சலி நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத் தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் பங்கேற்றனர்.
Post a Comment