சிறை சென்றார் சிறீதரன்?


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளார்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இந்திய மீனவர்களை சிறிதரன் நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இதனிடையே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களை விடுதலை செய்யாவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக கடற்றொழிலாளர்களையும் மீன்பிடிப்படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கோரி தொடர்ந்தும் நான்காவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இலங்கை சிறையில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கு அபராதம் விதித்தும் அவர்களை கண்டுக்கொள்ளாத மத்திய அரசை எதிர்த்தே போராட்டத்தை முன்னெடுத்து வருவதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இந்திய கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


No comments