மாவை இறுதிக்கிரியை:குடும்பத்தவர்களிடம் விசாரணை!
மாவை சேனாதிராஜாவின் இறுதி கிரியைகளின் போது தமிழரசு கட்சி தலைவர்களிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டமை தொடர்பில் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதன் விசாரணைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
மிரட்டல் விடுக்கும் பதாகையை காட்சிப்படுத்தியது யார், மற்றும் அதன் பின்னணி என்ன என்பவை தொடர்பில் மாவை சேனாதிராஜாவின் குடும்பத்தாரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணை பற்றிய தகவலை அவரது மகன் கலையமுதன் சேனாதிராஜா உறுதிப்படுத்தியுள்ளார்.
மாவை சேனாதிராசாவின் இறுதிக்கிரியை நடைபெற்ற மயானத்தை அண்மித்த அரசடிச் சந்தியில் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது .அதேபோன்று உடல் தகனம் செய்யப்பட்ட மயானத்திலும் ஒரு பதாகை கட்டப்பட்டிருந்தது. இரண்டையும் நானே எமது ஆதரவாளர்கள் ஊடாக அப்புறப்படுத்தினேன் என கலையமுதன் சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
மாவை சேனாதிராஜாவின் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் மாவையின் இறுதி அஞ்சலியில் தடை விதிக்கப்பட்டோர் என்னும் வகையில் சில முக்கிய அரசியல்வாதிகள் உட்பட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
பதாகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இரா. சாணக்கியன், பதில் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், பதில் தலைவர் சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட மேலும் சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்தன.
மேலும், காட்சிப்படுத்தப்பட்ட அந்த பதாகையில் மாவையின் மரணத்திற்கு காரணமான தமிழினத்தின் தமிழரசு துரோகிகள் என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Post a Comment