லசந்த அனுரவையும் துரத்த தொடங்கினார்?
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை வழக்கில் மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் அனுர அரசின் முடிவு தெற்கில் பாரிய அழுத்தங்களை தோற்றுவித்துள்ளது,
இதனிடையே சந்தேக நபர்களது விடுதலை குறித்த காரணங்களை அறிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்கவை இன்று (6) ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.சந்திப்பில் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் இணைந்து கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
சுமார் 2 மணி நேரம் நீடித்த கலந்துரையாடலின் போது சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பான வழக்கில், சாட்சியங்களை மறைத்தல் மற்றும் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட சந்தேக நபர்கள் மூவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று சட்டமா அதிபர் ஒரு கடிதம் மூலம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு தெரிவித்திருந்தமை பற்றி ஆராயப்பட்டுள்ளது.
இதனடையே லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பித்து, மேலும் சாட்சியங்களை சேகரிக்க வேண்டுமாயின், அதனை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று, பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி இது தொடர்பாக தொடர்ந்தும் கலந்துரையாடி வருகின்றார். தொடர்ந்தும் விசாரணைகள முன்னெடுத்தோ தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை ஆரம்பித்தோ சாட்சியங்களை மேலும் சேகரித்து நீதியை நிலைநாட்ட நடவடிக்கைக எடுப்போம் எனவும் இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.
Post a Comment