சுவீடன் அரச மாளிகையில் கடமையாற்றி பாதுகாவரில் கத்தி அவரைக் கிழித்தது!


சுவீடனில் ஸ்டாக்ஹோமில் உள்ள அரச மாளிகைக்கு முன் நடந்த விபத்தில் காவலர் ஒருவர்  படுகாயம் அடைந்தார். அவர் பனியில் சறுக்கி விழுந்தார்.அவரது துப்பாக்கியில் பொருத்தப்பட்ட ஒரு வகை கத்தி (பயோனெட்) அவரது தலையின் வலது பக்கத்தை ஊடுருவிச் சென்றதாக அரச காவலரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

முன்னெச்சரிக்கையாக ஏனைய பாதுகாவலர்களின் துப்பாக்கியில் பொருத்தப்பட்ட பயோனெட்டுகள் அகற்றப்பட்டன. பனி மற்றும் பனிக்கட்டியுடன் கூடிய வானிலை நிலவும் வரை காவலர்களின் பயோனெட்டுகள் அகற்றப்பட்டன. 

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பாதுகாவலரின் நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



No comments