நெதர்லாந்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வெடிப்பு: ஐவர் பலி!


நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்று சனிக்கிழமை மாலை சுமார் உள்ளூர் நேரப்படி 06:15 மணிக்கு தர்வேகாம்ப் பகுதியில் வெடிப்பைத் தொடர்ந்து பல வீடுகள் இடிந்து விழுந்தன. 

சம்பவத்தைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மூன்று மாடி கட்டிடத்திற்கு விரைந்தனர்.

வெடிப்புகளுக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மோப்ப நாய்களுடன் மீட்புக் குழுக்கள் இடிபாடுகளைச் சல்லடை போட அனுப்பப்பட்டுள்ளன, ஆனால் தளத்தின் சில பகுதிகள் அணுக முடியாத அளவுக்கு ஆபத்தானவையாகவே உள்ளன.

இன்னும் எத்தனை பேர் காணாமல் போயுள்ளனர் என்பது தெரியவில்லை என்று நகர மேயர் ஜான் வான் ஜானென் கூறினார்.


No comments